• May 09 2024

மட்டக்களப்பில் இன்று இடம்பெற்றுள்ள இரத்ததான நிகழ்வு!

Tharun / Apr 27th 2024, 6:43 pm
image

Advertisement

இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபகர்   தந்தை செல்வாவின் 47 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்   மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியினால் இன்று(27)  மாபெரும் இரத்ததான நிகழ்வு ஒன்று  சித்தாண்டியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வானது வாலிபர் முன்னணியின் தலைவர் க.சோபணன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.


இதன்போது ஆரம்ப நிகழ்வாக நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளால் மங்கள விளக்கேற்றப்பட்டது. சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய பிரதம குருவினால் இறை ஆசி வழங்கப்பட்டு தந்தை செல்வாவின் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இளைஞர், யுவதிகளினால் இரத்ததானம் வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் இலங்கை தமிழசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா,சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம், சீ.யோகேஸ்வரன், ப.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன் ஆகியோர்களுடன் முன்னாள் மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன் கலந்து கொண்டார். அத்துடன் இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட மகளிர் அணி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


மேற்படி இரத்ததானம் சேகரிப்பு நடவடிக்கையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பாளர் வைத்தியர் கி.டிலுகாவும் வைத்தியசாலை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பில் இன்று இடம்பெற்றுள்ள இரத்ததான நிகழ்வு இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபகர்   தந்தை செல்வாவின் 47 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்   மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியினால் இன்று(27)  மாபெரும் இரத்ததான நிகழ்வு ஒன்று  சித்தாண்டியில் நடைபெற்றது.இந்த நிகழ்வானது வாலிபர் முன்னணியின் தலைவர் க.சோபணன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.இதன்போது ஆரம்ப நிகழ்வாக நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளால் மங்கள விளக்கேற்றப்பட்டது. சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய பிரதம குருவினால் இறை ஆசி வழங்கப்பட்டு தந்தை செல்வாவின் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இளைஞர், யுவதிகளினால் இரத்ததானம் வழங்கப்பட்டது.குறித்த நிகழ்வில் இலங்கை தமிழசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா,சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம், சீ.யோகேஸ்வரன், ப.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன் ஆகியோர்களுடன் முன்னாள் மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன் கலந்து கொண்டார். அத்துடன் இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட மகளிர் அணி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.மேற்படி இரத்ததானம் சேகரிப்பு நடவடிக்கையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பாளர் வைத்தியர் கி.டிலுகாவும் வைத்தியசாலை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement