தங்கச் செயினை வளர்ப்பு நாய் விழுங்கியதால் நாய்க்கு பேதி மருந்து கொடுத்து அதனை மீளவும் பெற்றுக்கொண்ட தம்பதியரின் அசத்தலான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் பாலக்காடு, ஓலவக்கோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணதாஸ் என்பவரின் மனைவி பேபி ஆவர். அவர் கழுத்தில் தான் அணிந்திருந்த 3 பவுன் செயினை வீட்டின் கண்ணாடி முன் கழற்றி வைத்துள்ளார்.
சிறிதுநேரம் கழித்து செயினை பார்த்த போது அந்த செயின் வைத்த இடத்தில் தென்படாமையால் பதறிப்போன தம்பதியர் போன வீடு முழுவதும் தேடியுள்ளனர்.
வீட்டிற்கு யாரும் வருகை தராத நிலையில், நகை படுக்கை அறையிலுள்ள கண்ணாடி முன்பாகவே வைக்கப்பட்ட போதும் நகை எவ்வாறு மாயமானதென்று கிருஷ்ணதாஸ்ஸூம் மனைவியும் குழப்பமடைந்துள்ளனர்.
அந்த சமயம் அவர்கள் வளர்க்கும் செல்ல நாய் தரையில் கிடந்த பென்சில் ஒன்றை அப்படியே விழுங்கியது.
இதை பார்த்த தம்பதியரிற்கு நாய் தான் நகையை விழுங்கி இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதனால் நாயை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று வயிற்றை எக்ஸ்ரே எடுத்து பார்த்த பொழுது நாயின் வயிற்றில் செயின் இருப்பது தெரிய வந்துள்ளது.
பின்னர் நாய்க்கு பேதி மாத்திரையினை கொடுத்ததுடன், நாயை வீட்டுக்கு கொண்டு சென்று அது வெளியே எங்கும் சென்று விடாதவாறு கண்காணித்த நிலையில் மறுநாள் அந்த நாயின் வயிற்றில் இருந்து 3 பவுன் தங்க செயின் வெளியே வந்ததுள்ளது.
நாய்க்கு பேதி மருந்து கொடுத்து விழுங்கிய நகையினை மீட்ட தம்பதியரின் இச்சம்பவம் அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது.
தங்க செயினை விழுங்கிய நாய்- பேதி மருந்து கொடுத்து செயினை மீட்ட தம்பதியர்SamugamMedia தங்கச் செயினை வளர்ப்பு நாய் விழுங்கியதால் நாய்க்கு பேதி மருந்து கொடுத்து அதனை மீளவும் பெற்றுக்கொண்ட தம்பதியரின் அசத்தலான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் பாலக்காடு, ஓலவக்கோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணதாஸ் என்பவரின் மனைவி பேபி ஆவர். அவர் கழுத்தில் தான் அணிந்திருந்த 3 பவுன் செயினை வீட்டின் கண்ணாடி முன் கழற்றி வைத்துள்ளார். சிறிதுநேரம் கழித்து செயினை பார்த்த போது அந்த செயின் வைத்த இடத்தில் தென்படாமையால் பதறிப்போன தம்பதியர் போன வீடு முழுவதும் தேடியுள்ளனர். வீட்டிற்கு யாரும் வருகை தராத நிலையில், நகை படுக்கை அறையிலுள்ள கண்ணாடி முன்பாகவே வைக்கப்பட்ட போதும் நகை எவ்வாறு மாயமானதென்று கிருஷ்ணதாஸ்ஸூம் மனைவியும் குழப்பமடைந்துள்ளனர். அந்த சமயம் அவர்கள் வளர்க்கும் செல்ல நாய் தரையில் கிடந்த பென்சில் ஒன்றை அப்படியே விழுங்கியது.இதை பார்த்த தம்பதியரிற்கு நாய் தான் நகையை விழுங்கி இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் நாயை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று வயிற்றை எக்ஸ்ரே எடுத்து பார்த்த பொழுது நாயின் வயிற்றில் செயின் இருப்பது தெரிய வந்துள்ளது. பின்னர் நாய்க்கு பேதி மாத்திரையினை கொடுத்ததுடன், நாயை வீட்டுக்கு கொண்டு சென்று அது வெளியே எங்கும் சென்று விடாதவாறு கண்காணித்த நிலையில் மறுநாள் அந்த நாயின் வயிற்றில் இருந்து 3 பவுன் தங்க செயின் வெளியே வந்ததுள்ளது. நாய்க்கு பேதி மருந்து கொடுத்து விழுங்கிய நகையினை மீட்ட தம்பதியரின் இச்சம்பவம் அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது.