சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் வருடந்தோறும் நடைபெறும் மாபெரும் கலைவிழா நிகழ்வானது இன்றையதினம்(25) மாலை சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்ற கலா மண்டத்தில் நடைபெற்றது.
சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் யோ.பிரசாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனும், சிறப்பு விருந்தினர்களாக வலிகாமம் மேற்குப் பிரதேச சபை தவிசாளர் த.நடனேந்திரனும் , வலி மேற்கு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் அஜிதா கோபிநாத் மற்றும் யாழ்ப்பாண மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் தலைவர் தம்பிராசா குழந்தைவேலும் , கௌரவ விருந்தினர்களாக சங்கானை தெற்கு கிராம உத்தியோகஸ்தர் து.சுபேஸ் , ஓய்வுபெற்ற அதிபர் க.நல்லையா, பிரபல வர்த்தகர் செ.கனகசிங்கம், மாவடி ஞானவைரவர் ஆலய பரிபாலன சபை தலைவர் த.சிவசுப்பிரமணியம், மாவடி சனசமூக நிலைய தலைவர் ஸ்கந்தராசா, மாவடி அந்தியகால சகாய நிதிச் சபை தலைவர் க. கோபிநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் சிறுவர் சிறுமிகளின் நடன, நாடக நிகழ்வுகள் மற்றும் வாத்திய இசைச் சங்கமம், மிருதங்க இசை, கௌரவிப்பு நிகழ்வு, வில்லிசை என்பவற்றுடன் சிறப்பு நிகழ்வாக இளைஞர் மன்றத்தினரின் இளைஞர்கள் இணைந்து நடித்த "காதலும் கல்யாணமும்" எனும் நகைச்சுவை நாடகமும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இசைக் கலைஞர்கள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சங்கையூரில் இடம்பெற்ற மாபெரும் கலை விழா நிகழ்வு சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் வருடந்தோறும் நடைபெறும் மாபெரும் கலைவிழா நிகழ்வானது இன்றையதினம்(25) மாலை சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்ற கலா மண்டத்தில் நடைபெற்றது.சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் யோ.பிரசாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனும், சிறப்பு விருந்தினர்களாக வலிகாமம் மேற்குப் பிரதேச சபை தவிசாளர் த.நடனேந்திரனும் , வலி மேற்கு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் அஜிதா கோபிநாத் மற்றும் யாழ்ப்பாண மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் தலைவர் தம்பிராசா குழந்தைவேலும் , கௌரவ விருந்தினர்களாக சங்கானை தெற்கு கிராம உத்தியோகஸ்தர் து.சுபேஸ் , ஓய்வுபெற்ற அதிபர் க.நல்லையா, பிரபல வர்த்தகர் செ.கனகசிங்கம், மாவடி ஞானவைரவர் ஆலய பரிபாலன சபை தலைவர் த.சிவசுப்பிரமணியம், மாவடி சனசமூக நிலைய தலைவர் ஸ்கந்தராசா, மாவடி அந்தியகால சகாய நிதிச் சபை தலைவர் க. கோபிநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.இந்நிகழ்வில் சிறுவர் சிறுமிகளின் நடன, நாடக நிகழ்வுகள் மற்றும் வாத்திய இசைச் சங்கமம், மிருதங்க இசை, கௌரவிப்பு நிகழ்வு, வில்லிசை என்பவற்றுடன் சிறப்பு நிகழ்வாக இளைஞர் மன்றத்தினரின் இளைஞர்கள் இணைந்து நடித்த "காதலும் கல்யாணமும்" எனும் நகைச்சுவை நாடகமும் இடம்பெற்றது.இந்நிகழ்வில் இசைக் கலைஞர்கள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.முன்னைய இணைப்புhttps://samugammedia.com/a-grand-art-festival-organized-by-sanganai-mavadi-hindu-yuva-mandram-1671966240