ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த மால்டாவிலிருந்து முதன்முறையாக சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இந்நாட்டுக்கு வந்துள்ளது.
இந்த குழுவினர் இன்று (27) காலை 8.20 அளவில் டுபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் ஈகே - 650 மூலம் இலங்கை வந்தடைந்தனர்.
50 சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட இந்தக் குழு இலங்கையில் 12 நாட்கள் தங்கியிருக்கும்.
இந்த காலப்பகுதியில் அவர்கள் நீர்கொழும்பு, சீகிரியா, தம்புள்ளை, கவுடுல்ல தேசிய பூங்கா, கண்டி, நுவரெலியா, ஹோட்டன் சமவெளி, யால மற்றும் எல்ல ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.