ஆடிப்பிறப்பை முன்னிட்டு வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் பனை,தென்னை வள அபிவிருத்தி சங்கங்கள் இணைந்து நடத்தும் 'தால முற்றம்' பனை சார் உற்பத்தி கண்காட்சியும் விற்பனையும் இடம்பெறவுள்ளது.
அது நல்லூர் சங்கிலியன் பூங்காவில் எதிர்வரும் 14 , 15,16 ஆகிய தினங்களில் காலை 9 மணி தொடக்கம் இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது.
கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான திருமதி தேவநந்தினி பாபு தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
அத்துடன், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன மற்றும் வடக்கு மாகாண மகளிர் விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச்சு செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.