• Sep 20 2024

மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை! samugammedia

Tamil nila / Jun 28th 2023, 7:46 pm
image

Advertisement

மதுபான உற்பத்தி நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரியை 14 நாட்களுக்குள் செலுத்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அந்த நிறுவனங்களுக்கு இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அந்த நிறுவனங்களிடம் இருந்து வரி மற்றும் தாமதக் கட்டணமாக 616 கோடி ரூபாவை அரசாங்கம் வசூலிக்க வேண்டியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

10 மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து வரிப்பணம் அறவிடப்பட உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நேற்று (27) அழைப்பு விடுக்கப்பட்டு 14 நாட்களுக்குள் அனைத்துப் பணத்தையும் செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

குறித்த காலப்பகுதியினுள் நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால் அந்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.

மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை samugammedia மதுபான உற்பத்தி நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரியை 14 நாட்களுக்குள் செலுத்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்களுக்கு இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.அந்த நிறுவனங்களிடம் இருந்து வரி மற்றும் தாமதக் கட்டணமாக 616 கோடி ரூபாவை அரசாங்கம் வசூலிக்க வேண்டியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.10 மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து வரிப்பணம் அறவிடப்பட உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நேற்று (27) அழைப்பு விடுக்கப்பட்டு 14 நாட்களுக்குள் அனைத்துப் பணத்தையும் செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.குறித்த காலப்பகுதியினுள் நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால் அந்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement