யாழ் கோப்பாயில் இன்று மாலை ஆணொருவர் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கோப்பாய் வடக்கு வைத்தியசாலைக்கு முன்வீதியில் உள்ள வீடொன்றின் அறையிலிருந்து எரிந்த நிலையில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
65வயதுடைய கார்த்திகேசு திருப்பதி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.