மாகாண மட்டத்தில் புதிய பணி ஒழுங்குமுறையும் சுற்றறிக்கையும் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட வேண்டுமென ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் இடமாற்றத்தின் போது தொழிற்சங்க உறுப்பினர்களாக இல்லாத ஆசிரியர்கள் பாரிய அநீதியை எதிர்கொள்வதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஆசிரியர் இடமாற்ற சபைகள் ஒன்றிணைந்து ஆசிரியர் இடமாற்றப் பட்டியலை உருவாக்கினால் அது தவறான நடவடிக்கை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் கல்வி தொடர்பாக இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.