• Sep 29 2024

திருக்கோணேஸ்வரர் ஆலய கடைத் தொகுதியில் இளநீர் விற்பனையில் ஈடுபட்டவர் கசிப்புடன் கைது...!

Sharmi / Jun 24th 2024, 3:29 pm
image

Advertisement

திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய கடை தொகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (23) மாலை இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் மிகிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் திருக்கோணேஸ்வரர் கோயில் கடைத் தொகுதியில் இளநீர் விற்பனையில் ஈடுபட்டு வந்தவரே இவ்வாறு ஒரு போத்தல் கசிப்புடன் கைதாகினார். 

15 போத்தல்களில் 14 போத்தல்களை விற்பனை செய்துள்ள நிலையில் எஞ்சியுள்ள ஒரு போத்தலுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் நாளை (25) திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை திருகோணமலை தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

திருக்கோணேஸ்வரர் ஆலய கடைத் தொகுதியில் இளநீர் விற்பனையில் ஈடுபட்டவர் கசிப்புடன் கைது. திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய கடை தொகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று (23) மாலை இடம் பெற்றுள்ளது.இச் சம்பவத்தில் மிகிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் திருக்கோணேஸ்வரர் கோயில் கடைத் தொகுதியில் இளநீர் விற்பனையில் ஈடுபட்டு வந்தவரே இவ்வாறு ஒரு போத்தல் கசிப்புடன் கைதாகினார். 15 போத்தல்களில் 14 போத்தல்களை விற்பனை செய்துள்ள நிலையில் எஞ்சியுள்ள ஒரு போத்தலுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் நாளை (25) திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை திருகோணமலை தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement