இம்முறை 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திப்பெற வேண்டுமென்று கோரி இன்று புத்தளம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் விஷேட யாக பூஜையொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பூஜை ஆலய பிரதான குருக்களான சிவஸ்ரீ வெங்கட சுந்தரராம குருக்களின் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த விஷேட பூஜையில் நாளை பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு ஆசிகளைப் பெற்றனர்.