புத்தளம் கத்தோலிக்க தேவாலயமொன்றில் புனர்வாழ்வு பெற்று வந்த இளைஞன் ஒருவர் தேவாலயத்தின் அலுவலகத்திற்குள் புகுந்து 4 இலட்சத்து 95,000 ரூபா பணத்துடன் தப்பிச் சென்றுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த தேவாலயத்தின் சிறுவர் திட்ட முகாமையாளர், புத்தளம் பொலிஸ் நிலையத்துக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த இளைஞன் கொழும்பில் வசிப்பவர் என்றும், அதிகளவில் போதைப்பொருளுக்கு அடிமையானதன் காரணமாக தனக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என தேவாலயத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த இளைஞனின் வீட்டை சோதனையிட சென்ற போதும், அவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.
தேவாலயத்தில் புனர்வாழ்வு பெற்றுவந்த இளைஞன் பெருந்தொகை பணத்துடன் தப்பியோட்டம் samugammedia புத்தளம் கத்தோலிக்க தேவாலயமொன்றில் புனர்வாழ்வு பெற்று வந்த இளைஞன் ஒருவர் தேவாலயத்தின் அலுவலகத்திற்குள் புகுந்து 4 இலட்சத்து 95,000 ரூபா பணத்துடன் தப்பிச் சென்றுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.குறித்த தேவாலயத்தின் சிறுவர் திட்ட முகாமையாளர், புத்தளம் பொலிஸ் நிலையத்துக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இந்த இளைஞன் கொழும்பில் வசிப்பவர் என்றும், அதிகளவில் போதைப்பொருளுக்கு அடிமையானதன் காரணமாக தனக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என தேவாலயத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.புத்தளம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த இளைஞனின் வீட்டை சோதனையிட சென்ற போதும், அவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.