• May 19 2024

புத்தளத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் கைது...!காரணம் வெளியாகியது...!

Sharmi / Apr 27th 2023, 12:09 pm
image

Advertisement

புத்தளம் - அநுராதபுரம் வீதியில் மோட்டார் சைக்கிளில் கேரள கஞ்சா கடத்தி சென்ற சந்தேக நபர் ஒருவர் நேற்று மாலை கருவலகஸ்வெவ பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் புத்தளம் அனுராதபுரம் வீதியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டதில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபரிடம் இருந்த பையில் 10 கிலோ 153 கிராம் கேரள கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாகவில்லுவ பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் மற்றும் கேரளா கஞ்சாப் பொதிகளை புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.


புத்தளத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் கைது.காரணம் வெளியாகியது. புத்தளம் - அநுராதபுரம் வீதியில் மோட்டார் சைக்கிளில் கேரள கஞ்சா கடத்தி சென்ற சந்தேக நபர் ஒருவர் நேற்று மாலை கருவலகஸ்வெவ பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் புத்தளம் அனுராதபுரம் வீதியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டதில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபரிடம் இருந்த பையில் 10 கிலோ 153 கிராம் கேரள கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாகவில்லுவ பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபர் மற்றும் கேரளா கஞ்சாப் பொதிகளை புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement