மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோருக்கு எதிரான வழக்கிலிருந்து இருவரும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அமெரிக்காவில் வசிக்கும் நபரொருவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு சட்டபூர்வமான ஆவணம் இன்றி மத்திய வங்கிக்கு சொந்தமான 6.5 மில்லியன் டொலர்களை வழங்கியமை தொடர்பில் தீனியாகல பாலித்த தேரர் தாக்கல் செய்த வழக்கிலிருந்தே இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.