மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமாரபுரம் பிரதேசத்தில் ரயிலினால் மோதப்பட்டு இளைஞர் ஒருவர் நேற்று (23) மாலை உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மட்டக்களப்பு , குமாரபுரம் பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞராவார்.
இவர் மது போதையில் ரயில் பாதையில் சென்று கொண்டிருந்ததாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலால் மோதப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மது போதையில் விபரீதம். ரயில் மோதி உயிரிழந்த இளைஞன். தமிழர் பகுதியில் சம்பவம் samugammedia மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமாரபுரம் பிரதேசத்தில் ரயிலினால் மோதப்பட்டு இளைஞர் ஒருவர் நேற்று (23) மாலை உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் மட்டக்களப்பு , குமாரபுரம் பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞராவார்.இவர் மது போதையில் ரயில் பாதையில் சென்று கொண்டிருந்ததாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.மட்டக்களப்பு இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலால் மோதப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.