வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் தாயாருக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றையதினம் கொழும்பில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் தாயார் திருமதி.மேரி ஜோசபின் அமிர்தரத்தினம் கடந்த 21ம் திகதி தனது 93ஆவது வயதில் கொழும்பில் காலமானார்.
அன்னாரின் பூதவுடல் ஜயரட்ண மலர்ச்சாலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று மாலை பொரள்ளையில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.