• Sep 20 2024

ஜனாதிபதி தலைமையில் நாளை சர்வகட்சி மாநாடு!

Tamil nila / Jan 25th 2023, 4:32 pm
image

Advertisement

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் நாளை (26) மாலை 4.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் சர்வகட்சிக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும் இந்த சர்வகட்சி கூட்டத்திற்கு சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உட்பட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர், 2022 டிசம்பர் 13ஆம் திகதி அழைக்கப்பட்ட கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட நல்லிணக்க மேம்பாட்டுத் திட்டம் குறித்து இதன்போது மேலும் கலந்துரையாடப்பட்டு கட்சித் தலைவர்களின் இணக்கப்பாடும் எட்டப்படவுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நாளை சர்வகட்சி மாநாடு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் நாளை (26) மாலை 4.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் சர்வகட்சிக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும் இந்த சர்வகட்சி கூட்டத்திற்கு சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உட்பட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர், 2022 டிசம்பர் 13ஆம் திகதி அழைக்கப்பட்ட கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட நல்லிணக்க மேம்பாட்டுத் திட்டம் குறித்து இதன்போது மேலும் கலந்துரையாடப்பட்டு கட்சித் தலைவர்களின் இணக்கப்பாடும் எட்டப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement