• Apr 27 2024

இளம் பெண்ணை காதலித்து கரம் பிடித்த 80 வயது முதியவர்..!ஏங்கித் தவிக்கும் 90's கிட்ஸ்..!samugammedia

Sharmi / Jul 11th 2023, 10:49 am
image

Advertisement

இளம் பெண்ணொருவர் தன்னை விட 50 வயது கூடிய தாத்தாவை காதலித்து கரம் பிடித்துள்ளமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இச்சம்பவம்,தென் ஆப்பிரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அங்கு வசிக்கும், 30 வயதான டெர்சல் ரெஸ்மஸ் என்ற பெண்ணே, 80 வயதான வில்சன் ரஸ்மஸ் என்பவரை காதலித்து கரம் பிடித்துள்ளார்.

இருவரும், முதன் முதலாக  செய்தித்தாள் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில்,  திருமணமாகி பேரப்பிள்ளைகளையும் கண்டுவிட்ட வில்சன் பார்த்தவுடனே தனது காதலை அந்த இளம் பெண்ணிடம் சொல்லியுள்ளார்.

அதையடுத்து,  தொடர்ந்து டேட்டிங் கூட்டிப்போன தாத்தா, ஒரு வருடம் நகர்ந்த பின்னர் டெர்சலின் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார்.

அத்துடன், தாத்தா தனது 56 வயதுடைய மகளை  சாட்சியாக வைத்தே  இந்த திருமணத்தை செய்து முடித்துள்ளார்.

இந்நிலையில், அவர்களது திருமண வாழ்க்கை குறித்து இருவரும் தெரிவிக்கையில், தாம் இருவரும் வெளியில் சென்றால் பலரும் அப்பா, மகள் என்று நினைத்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆயினும்,  அவ்வாறு நினைப்பதால்  தமக்கு எந்த விதமான கவலையும் இல்லை என்றும் ஆத்மார்த்தமான காதல் தமக்குள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், கணவர்  தன்னை நன்றாகக் கவனித்துக் கொள்வதாகவும், அவரோடு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் டெர்சல் ரெஸ்மஸ் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



இளம் பெண்ணை காதலித்து கரம் பிடித்த 80 வயது முதியவர்.ஏங்கித் தவிக்கும் 90's கிட்ஸ்.samugammedia இளம் பெண்ணொருவர் தன்னை விட 50 வயது கூடிய தாத்தாவை காதலித்து கரம் பிடித்துள்ளமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம்,தென் ஆப்பிரிக்காவில் இடம்பெற்றுள்ளது. அங்கு வசிக்கும், 30 வயதான டெர்சல் ரெஸ்மஸ் என்ற பெண்ணே, 80 வயதான வில்சன் ரஸ்மஸ் என்பவரை காதலித்து கரம் பிடித்துள்ளார். இருவரும், முதன் முதலாக  செய்தித்தாள் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில்,  திருமணமாகி பேரப்பிள்ளைகளையும் கண்டுவிட்ட வில்சன் பார்த்தவுடனே தனது காதலை அந்த இளம் பெண்ணிடம் சொல்லியுள்ளார். அதையடுத்து,  தொடர்ந்து டேட்டிங் கூட்டிப்போன தாத்தா, ஒரு வருடம் நகர்ந்த பின்னர் டெர்சலின் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். அத்துடன், தாத்தா தனது 56 வயதுடைய மகளை  சாட்சியாக வைத்தே  இந்த திருமணத்தை செய்து முடித்துள்ளார். இந்நிலையில், அவர்களது திருமண வாழ்க்கை குறித்து இருவரும் தெரிவிக்கையில், தாம் இருவரும் வெளியில் சென்றால் பலரும் அப்பா, மகள் என்று நினைத்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். ஆயினும்,  அவ்வாறு நினைப்பதால்  தமக்கு எந்த விதமான கவலையும் இல்லை என்றும் ஆத்மார்த்தமான காதல் தமக்குள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், கணவர்  தன்னை நன்றாகக் கவனித்துக் கொள்வதாகவும், அவரோடு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் டெர்சல் ரெஸ்மஸ் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement