அரச திணைக்களங்களுக்கு இடையிலான மெய் வல்லுனர் விளையாட்டுப் போட்டி நிகழ்வில் பங்குபற்றி சிறைச்சாலை திணைக்களத்திற்காக அதிக பதக்கங்களை பெற்ற யாழ் சிறைச்சாலையின் வீரர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
யாழ் சிறைச்சாலையின் வீரர்களான C. Q யூட் பீரிஸ் உயரம் பாய்தல் போட்டியில் 2ம்இடம் வெள்ளி பதக்கத்தையும் T. C அன்ரு குண்டு போடுதல் போட்டியில் 2ம்இடம் வெள்ளி பதக்கத்தையும் பரிதி வட்டம் (தட்டெறிதல்) வீசுதல் 3ம் இடம் வெண்கல பதக்கத்தையும் S. சியானியஸ் ஈட்டி எறிதல் போட்டியில் 1ம் இடம் தங்க பதக்கத்தையும் H. J அபேயரத்தன 110M தடை தாண்டல் போட்டியில் 3ம் இடம் வெண்கல பதக்கத்தையும் J. றொகான் 4* 400M அஞ்சல் ஓட்டம் 3ம் இடம் வெண்கல பதக்கமும் 4*100 3ம் இடம் வெண்கல பதக்கத்தையும் மொத்தமாக 7 பதக்கங்களை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் குறித்த வீரர்களுக்கு மலர் மாலை இட்டு பொன்னாடை போர்த்தி சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் உத்தியோகத்தர்களால் கௌரவிக்கப்பட்டனர்.