தண்டவாள திருத்தப் பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்ட அனுராதபுரத்திற்கும் ஓமந்தேவிற்கும் இடையிலான புகையிரத சேவை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு,கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரையிலான ரயில் பயணங்கள் வழமையான கால அட்டவணையின்படி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அனுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் பாதை கடந்த ஜனவரி மாதம் தண்டவாள திருத்தப் பணிகளுக்காக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.