சந்நிதியான் ஆச்சிரமத்தால் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு நேற்றையதினம் சுமார் 800000 ரூபா பெறுமதியான மருத்துவப் பொருள்கள் வழங்கப்பட்டது.
தற்போது நிலவும் மருத்துவ பொருட்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு 800000 ரூபா பெறுமதியான மருத்துவப் பொருள்களை வைத்திய அத்தியட்சகரிடம் மோகனதாஸ் சுவாமிகள் நேரடியாகச் சென்று வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.