• Sep 19 2024

போதைப்பொருள் பாவனைக்கு எதிர்ப்பு: விசுவமடுவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

Sharmi / Jan 20th 2023, 4:37 pm
image

Advertisement

விசுவமடு பகுதியில் போதைப்பொருள் பாவனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் இன்றைய தினம் 1 மணியளவில் விஸ்வமடு வர்த்தகர்களால் கடைகள் அடைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 14 ஆம் திகதி விசுவமடு பகுதியில் தனியார் வர்த்தக நிலையம் ஒன்றில் போதைப் பொருளுக்கு அடிமையான கும்பல் ஒன்று வர்த்தக நிலையத்தில் சேதமாக்கப்பட்டமையை கண்டிக்கும் வகையிலும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் இடம் பெறக் கூடாது என வலியுறுத்தியும், போதைப்பொருள் அற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் எனும் தொனிப்பொருளில் விசுவமடு சந்தியில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

குறித்த போராட்டத்தில் வர்த்தகர்கள் அனைவரும் தமது வர்த்தக நிலையங்களை மூடி கலந்துகொண்டனர். 

இதன்போது ஜனாதிபதி மற்றும் பொலிஸ் திணைக்களத்தினருக்கும் மகஜர், ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருள் பாவனைக்கு எதிர்ப்பு: விசுவமடுவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் விசுவமடு பகுதியில் போதைப்பொருள் பாவனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.குறித்த போராட்டம் இன்றைய தினம் 1 மணியளவில் விஸ்வமடு வர்த்தகர்களால் கடைகள் அடைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டது.கடந்த 14 ஆம் திகதி விசுவமடு பகுதியில் தனியார் வர்த்தக நிலையம் ஒன்றில் போதைப் பொருளுக்கு அடிமையான கும்பல் ஒன்று வர்த்தக நிலையத்தில் சேதமாக்கப்பட்டமையை கண்டிக்கும் வகையிலும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் இடம் பெறக் கூடாது என வலியுறுத்தியும், போதைப்பொருள் அற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் எனும் தொனிப்பொருளில் விசுவமடு சந்தியில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் வர்த்தகர்கள் அனைவரும் தமது வர்த்தக நிலையங்களை மூடி கலந்துகொண்டனர். இதன்போது ஜனாதிபதி மற்றும் பொலிஸ் திணைக்களத்தினருக்கும் மகஜர், ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement