தியாகதீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ். தீவகம் வேலணை வங்களாவடி சந்தியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
அந்தவகையில் தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பை ஆரம்பித்த நேரமான காலை 9.45 மணிக்கு மாவீரரின் தாயார் சுடரேற்றலுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்களும்
தமிழ்த்தேசிய சமூக செயற்பாட்டாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.