கல்வியல் கல்லூரி படிப்பை நிறைவு செய்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த
ஆசிரியர்களுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு திருகோணமலை
இந்து கலாச்சார மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை (16) காலை இடம்பெற்றது.
இதன்போது 513 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்து சிறப்பித்தார்
கௌரவ
அதிகளாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான
கபில நுவான் அத்துகோரல,டீ.வீரசிங்க, ஆகியோர் கலந்து கொண்டனர். விசேட
அதிதியாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி. ரத்னாயக்க ஆகியோர்
கலந்து சிறப்பித்தனர்.
அத்தோடு கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களும் இந்நிகழ்வில் அதிதிகளாக கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.