மன்னார் கொமர்சியல் வங்கி ஒழுங்கு செய்த “அருணலு” வைபவத்திற்கான சித்தரப்போட்டி நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் வங்காலை ஆனாள் ஆரம்ப பாடசாலை அதிபர் அருட்சகோதரி மேரி ரொசானி தலைமையில் பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த போட்டியில் மன்னார் வங்காலை புனித ஆனாள் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் சுமார் ஐம்பது மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது ஆக்கங்களை சமர்பித்திருந்தனர்.
குறித்த நிகழ்வில் மன்னார் கொமர்சியல் வங்கி கிளையின் முகாமையாளர் டொமினிக் அலன் கலந்து கொண்டதுடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் அதே நேரம் பங்கு பற்றிய மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைத்தார்.
குறித்த நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கொமர்சியல் வங்கி மன்னார் கிளை ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டதுடன் நிகழ்வின் இறுதியில் பாடசாலை வளாகத்திற்குள் மர நடுகையும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் கொமர்சியல் கிளையினால் ஒழுங்கு செய்யப்பட்ட “அருணலு” வைபவ நிகழ்வு samugammedia மன்னார் கொமர்சியல் வங்கி ஒழுங்கு செய்த “அருணலு” வைபவத்திற்கான சித்தரப்போட்டி நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் வங்காலை ஆனாள் ஆரம்ப பாடசாலை அதிபர் அருட்சகோதரி மேரி ரொசானி தலைமையில் பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.குறித்த போட்டியில் மன்னார் வங்காலை புனித ஆனாள் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் சுமார் ஐம்பது மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது ஆக்கங்களை சமர்பித்திருந்தனர்.குறித்த நிகழ்வில் மன்னார் கொமர்சியல் வங்கி கிளையின் முகாமையாளர் டொமினிக் அலன் கலந்து கொண்டதுடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் அதே நேரம் பங்கு பற்றிய மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைத்தார். குறித்த நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கொமர்சியல் வங்கி மன்னார் கிளை ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டதுடன் நிகழ்வின் இறுதியில் பாடசாலை வளாகத்திற்குள் மர நடுகையும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.