குருநாகல் மாவட்டத்தில் இளைஞர்கள் குழு ஒன்றினால் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தாக்கப்பட்டு சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நபரொருவரின் வீட்டில் இடம்பெற்ற விருந்தொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போதே குறித்த இளஞர்கள் அவரை தாக்கியுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
நிகவெரட்டிய பன்சியகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கசிப்பு கடத்தல்காரர் என கூறப்படும் நபரின் வீட்டில் விருந்தினை முடித்து விட்டு குறித்த பொலிஸ் சார்ஜன்ட் வீட்டிற்கு செல்வதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இளைஞர்கள் குழுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இளைஞர்கள் இந்த சார்ஜென்ட்டை தாக்கியதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து குறித்த பொலிஸ் சார்ஜன்ட் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மீது தாக்குதல் .samugammedia குருநாகல் மாவட்டத்தில் இளைஞர்கள் குழு ஒன்றினால் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தாக்கப்பட்டு சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நபரொருவரின் வீட்டில் இடம்பெற்ற விருந்தொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போதே குறித்த இளஞர்கள் அவரை தாக்கியுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். நிகவெரட்டிய பன்சியகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கசிப்பு கடத்தல்காரர் என கூறப்படும் நபரின் வீட்டில் விருந்தினை முடித்து விட்டு குறித்த பொலிஸ் சார்ஜன்ட் வீட்டிற்கு செல்வதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இளைஞர்கள் குழுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இளைஞர்கள் இந்த சார்ஜென்ட்டை தாக்கியதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதையடுத்து குறித்த பொலிஸ் சார்ஜன்ட் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.