• May 09 2024

தெற்கு சூடானில் ஆயுதம் ஏந்திய மேய்ப்பர்கள் நடத்திய தாக்குதலில், 21 பேர் உயிரிழப்பு!

Tamil nila / Feb 4th 2023, 3:29 pm
image

Advertisement

தெற்கு சூடானில் ஆயுதம் ஏந்திய உள்நாட்டு போராளிகள் மற்றும் போட்டி இனக்குழுக்களால் நடத்தப்படும் வன்முறையால் நாடு தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில், நேற்று மத்திய ஈக்வடோரியாவின் காஜோ-கேஜி கவுண்டியில் உள்ள, கால்நடை முகாம் மீது ஆயுதமேந்திய மேய்ப்பர்கள் பழிவாங்கும் தாக்குதலில் ஈடுபட்டனர். 


இதில், 21 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மாவட்ட ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பழிக்குப் பழியாக நடந்த இந்த தாக்குதலுக்கு கவுண்டி ஆணையர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 


தெற்கு சூடானின் பல பகுதிகளில் வன்முறை தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த மக்களின் அமைதிக்காக பிரார்த்தனை செய்யும்படி போப் பிரான்சிஸ் கேட்டுக்கொண்டார். 


அத்துடன், கேன்டர்பரி பேராயர் மற்றும் ஸ்காட்லாந்து தேவாலய பொதுச்சபை நடுவர் ஆகியோருடன் போப் பிரான்சிஸ் இன்று தெற்கு சூடானில் அமைதி யாத்திரை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


தெற்கு சூடானில் ஆயுதம் ஏந்திய மேய்ப்பர்கள் நடத்திய தாக்குதலில், 21 பேர் உயிரிழப்பு தெற்கு சூடானில் ஆயுதம் ஏந்திய உள்நாட்டு போராளிகள் மற்றும் போட்டி இனக்குழுக்களால் நடத்தப்படும் வன்முறையால் நாடு தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மத்திய ஈக்வடோரியாவின் காஜோ-கேஜி கவுண்டியில் உள்ள, கால்நடை முகாம் மீது ஆயுதமேந்திய மேய்ப்பர்கள் பழிவாங்கும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 21 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மாவட்ட ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பழிக்குப் பழியாக நடந்த இந்த தாக்குதலுக்கு கவுண்டி ஆணையர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தெற்கு சூடானின் பல பகுதிகளில் வன்முறை தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த மக்களின் அமைதிக்காக பிரார்த்தனை செய்யும்படி போப் பிரான்சிஸ் கேட்டுக்கொண்டார். அத்துடன், கேன்டர்பரி பேராயர் மற்றும் ஸ்காட்லாந்து தேவாலய பொதுச்சபை நடுவர் ஆகியோருடன் போப் பிரான்சிஸ் இன்று தெற்கு சூடானில் அமைதி யாத்திரை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement