• Oct 18 2024

கிளிநொச்சி பகுதியில் தாக்குதல் முயற்சி – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் கைது! samugammedia

Chithra / May 11th 2023, 12:16 pm
image

Advertisement

கிளிநொச்சி புளியம்பொக்கணை பகுதியில் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட ஒருவர் பொசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இருந்து கடந்த மே9ம் திகதி அதிகாலை கூரிய ஆயுதங்களுடன் மூவர் புளியம்பொக்கணை களவெட்டிதிடல் பகுதியில் வசிக்கும் ஒருவரை தாக்குவதற்காக சென்றுள்ளனர்.

அவர்கள் அப்பகுதி இளைஞர்களால் பிடிக்கப்பட்ட நிலையில் அதில் இருவர் தப்பிச் சென்றுள்ளனர். மக்களால் பிடிக்கப்பட்டவர் தருமபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து வாள் ஒன்றும், இரும்பு கம்பி மற்றும் அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் தர்மபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தருமபுரம் போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். 

அவர்கள் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக தருமபுரம் போலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபரை இன்று(11)கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


கிளிநொச்சி பகுதியில் தாக்குதல் முயற்சி – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் கைது samugammedia கிளிநொச்சி புளியம்பொக்கணை பகுதியில் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட ஒருவர் பொசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இருந்து கடந்த மே9ம் திகதி அதிகாலை கூரிய ஆயுதங்களுடன் மூவர் புளியம்பொக்கணை களவெட்டிதிடல் பகுதியில் வசிக்கும் ஒருவரை தாக்குவதற்காக சென்றுள்ளனர்.அவர்கள் அப்பகுதி இளைஞர்களால் பிடிக்கப்பட்ட நிலையில் அதில் இருவர் தப்பிச் சென்றுள்ளனர். மக்களால் பிடிக்கப்பட்டவர் தருமபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.கைது செய்யப்பட்டவரிடமிருந்து வாள் ஒன்றும், இரும்பு கம்பி மற்றும் அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் தர்மபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தருமபுரம் போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். அவர்கள் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக தருமபுரம் போலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபரை இன்று(11)கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement