ஜப்பானின் தென்மேற்கு தீவில் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் 06 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மூவர் காணாமல் போயுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜப்பான் வானிலை ஆய்வும் மையம் சீறற்ற வானிலை குறித்து கீழ் மட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளது.
நிலச்சரிவு குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், அண்மை நாட்களில் உலகம் முழுவதும் அதிக வெப்பம், மற்றும் மழை போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மக்களை அச்சமடைய செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.