ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில் பதவியேற்பு விழாக்கள் எதனையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் பதவியேற்பு விழாக்களை ஏற்பாடு செய்வது தொடர்பில் பல்வேறு தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 திகதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் 134 வாக்குகளைப்பெற்று இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ளது.
இந்நிலையில், நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் பதவியேற்பு விழாக்களை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, பொது மற்றும் தனியார் பணத்தை செலவிட்டு பதவியேற்பு விழாக்களை நடத்தக்கூடாது என கடுமையாக உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதவியேற்பு விழாக்களுக்கு தடை - ஜனாதிபதி அதிகாரிகளுக்கு கடும் உத்தரவு samugammedia ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில் பதவியேற்பு விழாக்கள் எதனையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.ஜனாதிபதியின் பதவியேற்பு விழாக்களை ஏற்பாடு செய்வது தொடர்பில் பல்வேறு தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 திகதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் 134 வாக்குகளைப்பெற்று இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ளது.இந்நிலையில், நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் பதவியேற்பு விழாக்களை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில் இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, பொது மற்றும் தனியார் பணத்தை செலவிட்டு பதவியேற்பு விழாக்களை நடத்தக்கூடாது என கடுமையாக உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.