யாழ் வாழைப்பழத்தின் விலை திடீரென உயர்வடைந்துள்ளது என நுகர்வோரால் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கதலி வாழைப்பழம் கிலோ 200 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
அண்மையில் பெய்த மழை மற்றும் புயல் காற்றால் இந்த திடீர் விலையுயர்வு நிகழ்ந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை தைத்திருநாள் மற்றும் ஆலய உற்சவங்கள் இடம்பெற்று வருகின்றமையால் வாழைப்பழத்தின் தேவைப்பாடு அதிகரித்துள்ளது.
இதுவும் இந்த விலையுயர்வுக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.