இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தொழில் சங்க போராட்டத்திற்கு
ஆதரவு வழங்கும் வகையில் மூதூர் -பட்டித்திடல் மகா வித்தியாலய ஆசிரியர்கள்
,இன்று(27) வெள்ளிக்கிழமை இடைவேளைப் பகுதியில் பாடசாலைக்கு முன்னால் கையில்
கருப்புப் பட்டி அணிந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
கொழும்பிலுள்ள
கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆசிரியர் சங்கத்தினர் மேற்கொண்ட தொழில் சங்க
போராட்டத்தின் போது பாதுகாப்பு தரப்பினர் செயற்பட்ட விதத்தை கண்டித்து இவ்
எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.