• May 14 2024

பிரபல பாடகியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய கிட்டார் கலைஞர்..! இலங்கையில் சம்பவம் samugammedia

Chithra / Oct 27th 2023, 2:15 pm
image

Advertisement

 

நீர்கொழும்பு குரான பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல இசைக்குழு ஒன்றின் பெண் பாடகியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் அதே இசைக்குழுவை சேர்ந்த கிட்டார் கலைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜா-எல பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு குரான பிரதேசத்தில் உள்ள பிரபல இசைக்குழுவில் அங்கம் வகிக்கும் கிட்டார் கலைஞரான 32 வயதான ஜாஎல துடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அதே இசைக்குழுவைச் சேர்ந்த 28 வயதான பாடகி, தனது முறைப்பாட்டை சமர்ப்பித்ததுடன், பல்வேறு பகுதிகளுக்குச் செல்வதற்குத் தேவையான போக்குவரத்து வசதிகளுக்காக தனது இசைக்குழுவுக்கு வழங்கப்பட்ட பேருந்தில் சந்தேக நபர் தன்னை உடல் ரீதியாகவும், வாய்மொழியாகவும் தாக்கியதாகக் குறித்த முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

ஜாஎல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் சமிந்த எதிரிசூரியவின் பணிப்புரையின் பேரில் ஜாஎல பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் நிலைய கட்டளைத் தளபதி உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.ரேணுகாவினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பிரபல பாடகியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய கிட்டார் கலைஞர். இலங்கையில் சம்பவம் samugammedia  நீர்கொழும்பு குரான பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல இசைக்குழு ஒன்றின் பெண் பாடகியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் அதே இசைக்குழுவை சேர்ந்த கிட்டார் கலைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜா-எல பொலிஸார் தெரிவித்தனர்.நீர்கொழும்பு குரான பிரதேசத்தில் உள்ள பிரபல இசைக்குழுவில் அங்கம் வகிக்கும் கிட்டார் கலைஞரான 32 வயதான ஜாஎல துடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.அதே இசைக்குழுவைச் சேர்ந்த 28 வயதான பாடகி, தனது முறைப்பாட்டை சமர்ப்பித்ததுடன், பல்வேறு பகுதிகளுக்குச் செல்வதற்குத் தேவையான போக்குவரத்து வசதிகளுக்காக தனது இசைக்குழுவுக்கு வழங்கப்பட்ட பேருந்தில் சந்தேக நபர் தன்னை உடல் ரீதியாகவும், வாய்மொழியாகவும் தாக்கியதாகக் குறித்த முறைப்பாட்டில் கூறியுள்ளார்.ஜாஎல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் சமிந்த எதிரிசூரியவின் பணிப்புரையின் பேரில் ஜாஎல பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் நிலைய கட்டளைத் தளபதி உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.ரேணுகாவினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement