வானியல் விஞ்ஞானிகள் கண்டுபிடிபின் படி சூரியனை விட 30 பில்லியன் மடங்கு பெரிய கருந்துளை கண்டறியப்பட்டுள்ளது.
இதுவே காணப்படும் மிகப்பெரும் கருந்துளை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
உயிரினங்கள் வசிக்கக்கூடிய பூமி, சூரிய குடும்பத்தை சேர்ந்ததாகும்.
சூரியன் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் இணைந்து பால்வெளி அண்டம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த பால்வெளி அண்டத்தின் மையப்பகுதியில் மிகப்பெரிய கருந்துளை இருப்பதாக விஞ்ஞானிகள் முன்பு கண்டுபிடித்திருந்தனர். நடைமுறையில் இருக்கும் இயற்பியல் விதிகளுக்கு அப்பாற்பட்டு கருந்துளைகள் செயல்படுகின்றன.
இதனை கடந்து செல்லும் எதனையும் உள்ளே இழுத்துக் கொள்ளும் ஆற்றல் கருந்துளைக்கு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
அந்த வகையில் சூரியனைக்கூட இவை உள்ளே இழுத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், சூரியனை விடவும் 30 பில்லியன் மடங்கு பெரியதான கருந்துளை ஒன்றை வானியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
ஒரு பில்லியன் என்பது 100 கோடியாகும். பென்ட் லைட் எனப்படும் அறிவியல் முறை மற்றும் ஈர்ப்பு விதியை பயன்படுத்தி இந்த கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கருந்துளை பூமியில் இருந்து பல மில்லியன் ஒளி ஆண்டுக்கு அப்பால் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஒரு ஒளியாண்டு என்பது ஓராண்டில் ஒளி பயணிக்கும் தூரமாகும்.
இதனை 9.46 லட்சம் கோடி கிலோ மீட்டர் என்று மதிப்பிட்டுள்ளார்கள். புதிதாக கண்டறியப்பட்டுள்ள கருந்துளை குறித்து விஞ்ஞானிகள் மேலதிக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
சூரியனை விட 30 பில்லியன் மடங்கு பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு samugammedia வானியல் விஞ்ஞானிகள் கண்டுபிடிபின் படி சூரியனை விட 30 பில்லியன் மடங்கு பெரிய கருந்துளை கண்டறியப்பட்டுள்ளது.இதுவே காணப்படும் மிகப்பெரும் கருந்துளை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.உயிரினங்கள் வசிக்கக்கூடிய பூமி, சூரிய குடும்பத்தை சேர்ந்ததாகும். சூரியன் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் இணைந்து பால்வெளி அண்டம் என்று அழைக்கப்படுகிறது.இந்த பால்வெளி அண்டத்தின் மையப்பகுதியில் மிகப்பெரிய கருந்துளை இருப்பதாக விஞ்ஞானிகள் முன்பு கண்டுபிடித்திருந்தனர். நடைமுறையில் இருக்கும் இயற்பியல் விதிகளுக்கு அப்பாற்பட்டு கருந்துளைகள் செயல்படுகின்றன. இதனை கடந்து செல்லும் எதனையும் உள்ளே இழுத்துக் கொள்ளும் ஆற்றல் கருந்துளைக்கு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் சூரியனைக்கூட இவை உள்ளே இழுத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது.இந்த நிலையில், சூரியனை விடவும் 30 பில்லியன் மடங்கு பெரியதான கருந்துளை ஒன்றை வானியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். ஒரு பில்லியன் என்பது 100 கோடியாகும். பென்ட் லைட் எனப்படும் அறிவியல் முறை மற்றும் ஈர்ப்பு விதியை பயன்படுத்தி இந்த கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த கருந்துளை பூமியில் இருந்து பல மில்லியன் ஒளி ஆண்டுக்கு அப்பால் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஒரு ஒளியாண்டு என்பது ஓராண்டில் ஒளி பயணிக்கும் தூரமாகும். இதனை 9.46 லட்சம் கோடி கிலோ மீட்டர் என்று மதிப்பிட்டுள்ளார்கள். புதிதாக கண்டறியப்பட்டுள்ள கருந்துளை குறித்து விஞ்ஞானிகள் மேலதிக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது