• Oct 06 2024

கிளிநொச்சி மகா வித்தியாலய பழைய மாணவர் அணியினரால் குருதிக்கொடை..!

Sharmi / Oct 5th 2024, 2:33 pm
image

Advertisement

கிளிநொச்சி மகா வித்தியாலய 2015 உயர்தர மாணவர் அணியினர்  11 வருடமாக சிறுவர் தினத்தையொட்டி, யுத்தத்தின் போது உயிரிழந்த மாணவர் நினைவாக குருதிக்கொடை வழங்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், குறித்த குருதிக்கொடை வழங்கல் நிகழ்வு பழைய வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.

இந்த முகாமில் பாடசாலையின் முதல்வர், முன்னாள் முதல்வர், முன்னாள் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது சிறந்த சேவையாளர் விருதினை யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் ஓய்வு பெற்ற முதல்வர் வணபிதா  ஞானப்பொன்ராஜா அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. 

சிறந்த தொழில் முயற்சியாளர் விருதினை  முன்னாள் போராளி மாற்றுவலுவுள்ள சுயதொழில் முயற்சியாளர் சசிகலாக்கு வழங்கி வவைக்கப்பட்டது.

சிறந்த ஆசிரியர் விருதினை கிளிநொச்சி மகா வித்தியாலய ஓய்வு நிலை ஆசிரியை  திருமதி பத்மானந்தனுக்கு வழங்கப்பட்டது.






கிளிநொச்சி மகா வித்தியாலய பழைய மாணவர் அணியினரால் குருதிக்கொடை. கிளிநொச்சி மகா வித்தியாலய 2015 உயர்தர மாணவர் அணியினர்  11 வருடமாக சிறுவர் தினத்தையொட்டி, யுத்தத்தின் போது உயிரிழந்த மாணவர் நினைவாக குருதிக்கொடை வழங்கப்பட்டு வருகின்றது.அந்தவகையில், குறித்த குருதிக்கொடை வழங்கல் நிகழ்வு பழைய வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் பாடசாலையின் முதல்வர், முன்னாள் முதல்வர், முன்னாள் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.இதன்போது சிறந்த சேவையாளர் விருதினை யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் ஓய்வு பெற்ற முதல்வர் வணபிதா  ஞானப்பொன்ராஜா அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. சிறந்த தொழில் முயற்சியாளர் விருதினை  முன்னாள் போராளி மாற்றுவலுவுள்ள சுயதொழில் முயற்சியாளர் சசிகலாக்கு வழங்கி வவைக்கப்பட்டது.சிறந்த ஆசிரியர் விருதினை கிளிநொச்சி மகா வித்தியாலய ஓய்வு நிலை ஆசிரியை  திருமதி பத்மானந்தனுக்கு வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement