திருகோணமலை, சாம்பல்தீவு - மாங்கனாய் குளத்திற்கு குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (03) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்தவர் திருகோணமலை, கோனேசபுரி பகுதியைச் சேர்ந்த கமலஹாசன் விஷ்வா (16 வயது) எனவும் தெரிய வருகின்றது.
சக நண்பர்களுடன் இன்று மாலை மாங்கனாய் குளத்திற்கு குளிக்கச் சென்ற போது தாமரைப் பூ பறிக்கச் சென்றுள்ளார்.
இதன் போது தாமரைக் கொடி சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் நிலாவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தாமரைப் பூ பறிக்கச் சென்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு தமிழர் பகுதியில் சோகம் samugammedia திருகோணமலை, சாம்பல்தீவு - மாங்கனாய் குளத்திற்கு குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் இன்று (03) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்தவர் திருகோணமலை, கோனேசபுரி பகுதியைச் சேர்ந்த கமலஹாசன் விஷ்வா (16 வயது) எனவும் தெரிய வருகின்றது.சக நண்பர்களுடன் இன்று மாலை மாங்கனாய் குளத்திற்கு குளிக்கச் சென்ற போது தாமரைப் பூ பறிக்கச் சென்றுள்ளார்.இதன் போது தாமரைக் கொடி சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் நிலாவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.