உத்திர பிரதேச மாநிலம், தியோரியா மாவட்டத்தில் ராம் நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு திருமணம் செய்வதற்கு நிச்சயிக்கப்பட்டுள்ளது.
பின்பு அருகில் உள்ள மாதவ்பூரில் திருமணம் நடத்த இருவீட்டினரும் சம்மமதம் தெரிவித்த நிலையில், கடந்த 8ம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்தின் போது, மணமகளின் வீட்டினர் சிலர் மது போதையில் இருந்த நிலையில், மணமக்கள் புகைப்படம் எடுப்பதற்கு தயாராகி வந்துள்ளனர். அப்பொழுது மணமகன் மற்றும் மணமகள் வீட்டாருக்கு இடையே யார் முதலில் புகைப்படம் எடுப்பது என்று தகராறு ஏற்பட்டுள்ளது
குறித்த தகராறு இறுதியில் கைகலப்பாக மாறிய நிலையில், மணப்பெண்ணின் சகோதரி உட்பட பலருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில், இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில், காயம் பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், காவல்துறையினர் இரு வீட்டினரையும் சமாதானப்படுத்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கனவுகளோடு காத்திருந்த மணமக்கள்: உறவினர்களால் திருமண வீட்டில் ஏற்பட்ட சிக்கல் உத்திர பிரதேச மாநிலம், தியோரியா மாவட்டத்தில் ராம் நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு திருமணம் செய்வதற்கு நிச்சயிக்கப்பட்டுள்ளது.பின்பு அருகில் உள்ள மாதவ்பூரில் திருமணம் நடத்த இருவீட்டினரும் சம்மமதம் தெரிவித்த நிலையில், கடந்த 8ம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது.திருமணத்தின் போது, மணமகளின் வீட்டினர் சிலர் மது போதையில் இருந்த நிலையில், மணமக்கள் புகைப்படம் எடுப்பதற்கு தயாராகி வந்துள்ளனர். அப்பொழுது மணமகன் மற்றும் மணமகள் வீட்டாருக்கு இடையே யார் முதலில் புகைப்படம் எடுப்பது என்று தகராறு ஏற்பட்டுள்ளதுகுறித்த தகராறு இறுதியில் கைகலப்பாக மாறிய நிலையில், மணப்பெண்ணின் சகோதரி உட்பட பலருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில், இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில், காயம் பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், காவல்துறையினர் இரு வீட்டினரையும் சமாதானப்படுத்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.