வரலாற்றுச்சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலய சோபகிருது வருட வருடாந்த மஹோற்சவம் இன்று மதியம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை இன்று காலை ஆலய அறங்காவலர் சபைக் காரியாலயத்தில் இருந்து ஆலயத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.