ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.
பொதுஜன பெரமுனாவின் மாவட்டத் தலைவர்கள் பங்காளி கட்சிகளின் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், அரசாங்கத்தை முன்கொண்டு செல்லும் விதம் தொடர்பிலும், எதிர்காலத்தில் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் அதனை எதிர்கொள்ளும் விதம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்
ஜனாதிபதியுடன் 'மொட்டு' பிரதிநிதிகள் முக்கிய சந்திப்பு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் வெளியானது samugammedia ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.பொதுஜன பெரமுனாவின் மாவட்டத் தலைவர்கள் பங்காளி கட்சிகளின் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.அத்துடன், அரசாங்கத்தை முன்கொண்டு செல்லும் விதம் தொடர்பிலும், எதிர்காலத்தில் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் அதனை எதிர்கொள்ளும் விதம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்