• Sep 20 2024

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுன சிறப்பான வெற்றியை பெறும்- சாகர காரியவசம் நம்பிக்கை!

Sharmi / Jan 9th 2023, 10:27 pm
image

Advertisement

பொதுஜன பெரமுனவிற்கு எதிராக சமூக ஊடகங்களில் பல்வேறு சேறுபூசல்கள், குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து முன்வைத்தபோதும்   மக்களின் மனங்களில் தற்போதும் மொட்டுக்கட்சி இருப்பதாக கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் இன்று உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார். கட்சிக்கு எதிராக சமூக ஊடகங்களில் பல்வேறு சேறுபூசல்கள், குற்றச்சாட்டுக்களை சுமத்தினாலும் மக்களின் மனங்களில் தற்போதும் மொட்டுக்கட்சி இருக்கின்றது.

அத்துடன் நாட்டுக்காக இணைந்து பணியாற்ற முடிந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய தேசியக்கட்சியுடன் ஒன்றாக இணைந்து பணியாற்றுவது என நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பிரசாரங்கள் உட்பட தேர்தல் பணிகளில் பசில் ராஜபக்ச செயற்பாட்டு ரீதியாக ஈடுபடுவார் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சிறப்பான வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுன சிறப்பான வெற்றியை பெறும்- சாகர காரியவசம் நம்பிக்கை பொதுஜன பெரமுனவிற்கு எதிராக சமூக ஊடகங்களில் பல்வேறு சேறுபூசல்கள், குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து முன்வைத்தபோதும்   மக்களின் மனங்களில் தற்போதும் மொட்டுக்கட்சி இருப்பதாக கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.கொழும்பு மாவட்டத்தில் இன்று உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார். கட்சிக்கு எதிராக சமூக ஊடகங்களில் பல்வேறு சேறுபூசல்கள், குற்றச்சாட்டுக்களை சுமத்தினாலும் மக்களின் மனங்களில் தற்போதும் மொட்டுக்கட்சி இருக்கின்றது.அத்துடன் நாட்டுக்காக இணைந்து பணியாற்ற முடிந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய தேசியக்கட்சியுடன் ஒன்றாக இணைந்து பணியாற்றுவது என நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பிரசாரங்கள் உட்பட தேர்தல் பணிகளில் பசில் ராஜபக்ச செயற்பாட்டு ரீதியாக ஈடுபடுவார் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சிறப்பான வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement