• Apr 30 2024

கொத்து ரொட்டி விலை 1,900 ரூபாய்..! அதிர்ச்சியடைந்த வெளிநாட்டவரை மிரட்டிய உணவு விற்பனையாளருக்கு ஏற்பட்ட கதி

Chithra / Apr 17th 2024, 7:36 am
image

Advertisement

கொழும்பு - புதுக்கடை பகுதியில் சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்து ரொட்டியை அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வாழைத்தோட்டம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 குறித்த உணவகத்தில்,  உணவைப் பெற்றுக் கொள்ளச் சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் கொத்து ரொட்டியின் விலையைக் கேட்டபோது, அந்த உணவகத்தைச் சேர்ந்தவர் 1,900 ரூபாய் என அறிவித்துள்ளார்.

விலையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வெளிநாட்டவர் வெளிப்படையாகவே தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்த நிலையில்,  உணவு விற்பனை நிலையத்தைச் சேர்ந்தவர் சுற்றுலாப் பயணியை மிரட்டும் தொனியில் எச்சரித்துள்ளார். 

இவை, அனைத்தும் குறித்த சுற்றுலாப் பயணியால் காணொளியாக பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில்,  நேற்றையதினம்  உணவகத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொத்து ரொட்டி விலை 1,900 ரூபாய். அதிர்ச்சியடைந்த வெளிநாட்டவரை மிரட்டிய உணவு விற்பனையாளருக்கு ஏற்பட்ட கதி கொழும்பு - புதுக்கடை பகுதியில் சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்து ரொட்டியை அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் வாழைத்தோட்டம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த உணவகத்தில்,  உணவைப் பெற்றுக் கொள்ளச் சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் கொத்து ரொட்டியின் விலையைக் கேட்டபோது, அந்த உணவகத்தைச் சேர்ந்தவர் 1,900 ரூபாய் என அறிவித்துள்ளார்.விலையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வெளிநாட்டவர் வெளிப்படையாகவே தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்த நிலையில்,  உணவு விற்பனை நிலையத்தைச் சேர்ந்தவர் சுற்றுலாப் பயணியை மிரட்டும் தொனியில் எச்சரித்துள்ளார். இவை, அனைத்தும் குறித்த சுற்றுலாப் பயணியால் காணொளியாக பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில்,  நேற்றையதினம்  உணவகத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement