• May 02 2024

50 பயணிகளுடன் சென்ற பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து - மாணவர்கள் உட்பட 9 பேர் வைத்தியலையில்..!

Chithra / Apr 9th 2024, 11:13 am
image

Advertisement

 

நாவலப்பிட்டி - தொலஸ்பாகேவில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பேருந்து  ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் உள்ள மண்மேட்டில் மோதி, இன்று காலை  குறித்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில், மூன்று பாடசாலை மாணவர்கள், ஐந்து பயணிகள் மற்றும் பஸ் சாரதி ஆகியோர் காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தின் போது பஸ்ஸில் பாடசாலை மாணவர்கள் உட்பட 50 பேர் பயணம் செய்துள்ளதாக தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


50 பயணிகளுடன் சென்ற பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து - மாணவர்கள் உட்பட 9 பேர் வைத்தியலையில்.  நாவலப்பிட்டி - தொலஸ்பாகேவில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பேருந்து  ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது.வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் உள்ள மண்மேட்டில் மோதி, இன்று காலை  குறித்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில், மூன்று பாடசாலை மாணவர்கள், ஐந்து பயணிகள் மற்றும் பஸ் சாரதி ஆகியோர் காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்தின் போது பஸ்ஸில் பாடசாலை மாணவர்கள் உட்பட 50 பேர் பயணம் செய்துள்ளதாக தெரியவருகின்றது.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement