• Mar 31 2025

யாழில் ஆபத்தான முறையில் பயணித்த பேருந்து - கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பணிப்பு!

Chithra / Dec 29th 2024, 7:54 am
image


 

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை இடையே போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஒன்று வீதியில் ஆபத்தான முறையில் பயணித்தமை தொடர்பில் மக்கள் விசனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த பயணமானது, பயணிகள் மத்தியிலும் வீதியில் பயணித்தவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னால் வரும் வாகனத்துக்கு வழி விடாமல் வீதியின் குறுக்கும் மறுக்குமாக பேருந்தானது பயணத்தில் ஈடுபட்டுள்ளது.

இந்த காணொளியானது சமூக ஊடகங்களில் பரவும், நிலையில் பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இவ்வாறான சாரத்தியத்துக்கு கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, வடக்கு மாகாண தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தவிசாளர் க.மகேஸ்வரனை வடக்கு மாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கு அமைவாக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


யாழில் ஆபத்தான முறையில் பயணித்த பேருந்து - கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பணிப்பு  யாழ்ப்பாணம் - பருத்தித்துறை இடையே போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஒன்று வீதியில் ஆபத்தான முறையில் பயணித்தமை தொடர்பில் மக்கள் விசனங்களை வெளியிட்டு வருகின்றனர்.இந்த பயணமானது, பயணிகள் மத்தியிலும் வீதியில் பயணித்தவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பின்னால் வரும் வாகனத்துக்கு வழி விடாமல் வீதியின் குறுக்கும் மறுக்குமாக பேருந்தானது பயணத்தில் ஈடுபட்டுள்ளது.இந்த காணொளியானது சமூக ஊடகங்களில் பரவும், நிலையில் பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.இவ்வாறான சாரத்தியத்துக்கு கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, வடக்கு மாகாண தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தவிசாளர் க.மகேஸ்வரனை வடக்கு மாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.அதற்கு அமைவாக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement