• Mar 29 2024

குளிர்காலத்தில் பச்சை பட்டாணி உட்கொள்ளலாமா!

Sharmi / Dec 17th 2022, 9:12 pm
image

Advertisement

குளிர்காலத்தில் பச்சை பட்டாணியை பலர் சாப்பிடுகிறார்கள். குறித்த  பச்சை பட்டாணி என்பது பொதுவாக உருளை வடிவத்தில் இருக்கும் பருப்பு வகை ஆகும்.

குறித்த  விதைகள் அவரை போன்ற தோற்றத்தில் இருக்கும். இது ஓராண்டு தாவரமாகும். குளிர்கால பயிரான இவை பனிக் காலம் தொடங்கி வெயில் காலம் வரை பயிரிடப்படும்.

இந்த குளிர்கால பட்டாணியில் அதிக அளவில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்து இருக்கின்றன. இதனால், பச்சை பட்டாணியை அதிகளவில் மக்கள் சமையலில் பயன்படுத்துகிறார்கள்.

பச்சைப் பட்டாணியில் சில அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.ஆனால் அவற்றை அதிக அளவில் சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பச்சை பட்டாணி மிகவும் சத்தானது மற்றும் இதனை ஒருவரின் உணவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.அவற்றில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கும், நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமானத்துக்கும் உதவுகின்றன.

பச்சைப் பட்டாணியை அதிக அளவில் உட்கொள்வது சிலருக்கு வயிற்றில் வீக்கத்தை ஏற்படலாம்.ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நடத்திய ஒரு ஆய்வின்படி பச்சைப் பட்டாணியில் லெக்டின் மற்றும் பைடிக் போன்ற சில எதிர்ப்புச் சத்துக்கள் உள்ளன.

அவை வாயுவுடன் சேர்ந்து வீக்கத்தை ஏற்படுத்தும். லெக்டின் பெரிய அளவில் இல்லாததால் ஒரு நேரத்தில் உண்ணும் பட்டாணியின் அளவை 1ஃ3 கப் அளவுக்குக் குறைப்பது போதுமானதாக இருக்கும். நிச்சயமாக போதுமான அளவு பச்சை பட்டாணி ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. ஆனால் அவற்றில் சில ஊட்டச்சத்துக்களும் உள்ளன.

பச்சை பட்டாணியில் பைடிக் அமிலமும் உள்ளது. இது உடலில் இரும்பு, கால்சியம் மற்றும் துத்தநாகத்தை உறிஞ்சுவதைக் குறைக்கிறது.

இதனால், உங்கள் உடலில் ஊட்டச்சத்துக்கள் குறைவாக உறிஞ்சப்படுகிறது.பச்சைப் பட்டாணியில் அதிக புரதச் சத்து உள்ளது என்றும் அதை அதிக அளவில் சாப்பிட்டால் சிறுநீரகத்தின் செயல்பாட்டை பாதிக்கும் என்றும் ஒரு ஆய்வு கூறுகிறது. அது மூட்டு வலியை உண்டாக்கும் உடலில் யூரிக் அமில அளவையும் அதிகரிக்கச் செய்யும்.

பச்சை பட்டாணி சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்த வேண்டாம். ஏனெனில் பச்சை பட்டாணியின் ஆரோக்கிய நன்மைகள் அதன் பக்க விளைவுகளை விட அதிகமாக உள்ளது. எனவே ஒருவர் பச்சை பட்டாணியை கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என மருத்தவர்கள்  தெரிவித்துள்ளனர்.

குளிர்காலத்தில் பச்சை பட்டாணி உட்கொள்ளலாமா குளிர்காலத்தில் பச்சை பட்டாணியை பலர் சாப்பிடுகிறார்கள். குறித்த  பச்சை பட்டாணி என்பது பொதுவாக உருளை வடிவத்தில் இருக்கும் பருப்பு வகை ஆகும்.குறித்த  விதைகள் அவரை போன்ற தோற்றத்தில் இருக்கும். இது ஓராண்டு தாவரமாகும். குளிர்கால பயிரான இவை பனிக் காலம் தொடங்கி வெயில் காலம் வரை பயிரிடப்படும்.இந்த குளிர்கால பட்டாணியில் அதிக அளவில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்து இருக்கின்றன. இதனால், பச்சை பட்டாணியை அதிகளவில் மக்கள் சமையலில் பயன்படுத்துகிறார்கள்.பச்சைப் பட்டாணியில் சில அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.ஆனால் அவற்றை அதிக அளவில் சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.பச்சை பட்டாணி மிகவும் சத்தானது மற்றும் இதனை ஒருவரின் உணவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.அவற்றில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கும், நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமானத்துக்கும் உதவுகின்றன.பச்சைப் பட்டாணியை அதிக அளவில் உட்கொள்வது சிலருக்கு வயிற்றில் வீக்கத்தை ஏற்படலாம்.ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நடத்திய ஒரு ஆய்வின்படி பச்சைப் பட்டாணியில் லெக்டின் மற்றும் பைடிக் போன்ற சில எதிர்ப்புச் சத்துக்கள் உள்ளன.அவை வாயுவுடன் சேர்ந்து வீக்கத்தை ஏற்படுத்தும். லெக்டின் பெரிய அளவில் இல்லாததால் ஒரு நேரத்தில் உண்ணும் பட்டாணியின் அளவை 1ஃ3 கப் அளவுக்குக் குறைப்பது போதுமானதாக இருக்கும். நிச்சயமாக போதுமான அளவு பச்சை பட்டாணி ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. ஆனால் அவற்றில் சில ஊட்டச்சத்துக்களும் உள்ளன.பச்சை பட்டாணியில் பைடிக் அமிலமும் உள்ளது. இது உடலில் இரும்பு, கால்சியம் மற்றும் துத்தநாகத்தை உறிஞ்சுவதைக் குறைக்கிறது.இதனால், உங்கள் உடலில் ஊட்டச்சத்துக்கள் குறைவாக உறிஞ்சப்படுகிறது.பச்சைப் பட்டாணியில் அதிக புரதச் சத்து உள்ளது என்றும் அதை அதிக அளவில் சாப்பிட்டால் சிறுநீரகத்தின் செயல்பாட்டை பாதிக்கும் என்றும் ஒரு ஆய்வு கூறுகிறது. அது மூட்டு வலியை உண்டாக்கும் உடலில் யூரிக் அமில அளவையும் அதிகரிக்கச் செய்யும்.பச்சை பட்டாணி சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்த வேண்டாம். ஏனெனில் பச்சை பட்டாணியின் ஆரோக்கிய நன்மைகள் அதன் பக்க விளைவுகளை விட அதிகமாக உள்ளது. எனவே ஒருவர் பச்சை பட்டாணியை கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என மருத்தவர்கள்  தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement