• Apr 27 2024

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த முடியாது- கைவிரித்தது தேர்தல்கள் ஆணைக்குழு!SamugamMedia

Sharmi / Mar 15th 2023, 11:05 am
image

Advertisement

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறுமா இல்லையா என்பது தனக்கும் பிரச்சினையாக உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

பணம் மற்றும் தொடர்புடைய அமைப்புகளின் ஆதரவின்றி தேர்தல் ஆணையத்தால் மட்டும் தேர்தல் நடத்த முடியாது என்றும் அவர் கூறினார்.

பணத்தை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும், கொடுக்கப்படும் பணத்தை பொறுத்தே ஏனைய செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதற்கிடையில், பணம் இல்லாததால், வாக்குச்சீட்டு அச்சடிக்க முடியாது என அச்சகம் கூறினால், தபால் மூல வாக்குச்சீட்டு குறித்து, ஆணைக்குழு கூடி முடிவெடுக்க வேண்டும் என தலைவர் தொடர்கிறார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த முடியாது- கைவிரித்தது தேர்தல்கள் ஆணைக்குழுSamugamMedia உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறுமா இல்லையா என்பது தனக்கும் பிரச்சினையாக உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.பணம் மற்றும் தொடர்புடைய அமைப்புகளின் ஆதரவின்றி தேர்தல் ஆணையத்தால் மட்டும் தேர்தல் நடத்த முடியாது என்றும் அவர் கூறினார்.பணத்தை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும், கொடுக்கப்படும் பணத்தை பொறுத்தே ஏனைய செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.இதற்கிடையில், பணம் இல்லாததால், வாக்குச்சீட்டு அச்சடிக்க முடியாது என அச்சகம் கூறினால், தபால் மூல வாக்குச்சீட்டு குறித்து, ஆணைக்குழு கூடி முடிவெடுக்க வேண்டும் என தலைவர் தொடர்கிறார்.

Advertisement

Advertisement

Advertisement