• May 09 2024

பதவி விலகியதாக கூறப்படும் சார்ள்ஸ், வர்த்தமானியில் கையெழுத்து!

Chithra / Feb 1st 2023, 2:44 pm
image

Advertisement

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்புரிமையிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்த திருமதி ஜி.எஸ்.எம்.சார்ள்ஸ், நேற்று வெளியான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட்டுள்ளார்.

இளைஞர் வாக்குகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலில் திருமதி சார்லஸ் கையெழுத்திட்டதை ஆணைக்குழுவின் தலைவரும் உறுதிப்படுத்தினார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த அவர், அன்று முதல் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வரவில்லை என்றும், அந்த நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை என்றும் தகவல் வெளியானது.

எனினும், நேற்று அச்சிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் அவர் கையொப்பமிட்டுள்ளதால், அவர் தொடர்ந்தும் ஆணைக்குழுவின் உறுப்பினராக இருப்பார் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது

பதவி விலகியதாக கூறப்படும் சார்ள்ஸ், வர்த்தமானியில் கையெழுத்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்புரிமையிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்த திருமதி ஜி.எஸ்.எம்.சார்ள்ஸ், நேற்று வெளியான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட்டுள்ளார்.இளைஞர் வாக்குகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலில் திருமதி சார்லஸ் கையெழுத்திட்டதை ஆணைக்குழுவின் தலைவரும் உறுதிப்படுத்தினார்.தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த அவர், அன்று முதல் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வரவில்லை என்றும், அந்த நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை என்றும் தகவல் வெளியானது.எனினும், நேற்று அச்சிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் அவர் கையொப்பமிட்டுள்ளதால், அவர் தொடர்ந்தும் ஆணைக்குழுவின் உறுப்பினராக இருப்பார் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement