• May 13 2024

திருமலையில், மாணவர்களுக்கு இடையே மோதல் - மூவர் வைத்தியசாலையில் அனுமதி! samugammedia

Tamil nila / Apr 4th 2023, 9:03 pm
image

Advertisement

திருகோணமலை - மஹதிவுல்வெவ தேசிய பாடசாலையில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று (04)  பெற்றுள்ளது.

மஹதிவுல்வெவ தேசிய பாடசாலையில் பத்தாம் தரம் மற்றும் பதினோராம் தரம் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அதே பகுதியைச் சேர்ந்த மூவர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

ஆறாம் வகுப்பிற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு இன்று இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இருந்த போதிலும் முதியன்சலாகே நிரஞ்லா ஜெயவீர என்ற பெண் தனது மகனை பதினோராம் தர மாணவர்கள் தாக்கியதாக மொரவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதே நேரம் தாக்கியதாக கூறப்படும் மாணவர்களும் தாக்குதலுக்குள்ளான மாணவரொருவரும் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

திருமலையில், மாணவர்களுக்கு இடையே மோதல் - மூவர் வைத்தியசாலையில் அனுமதி samugammedia திருகோணமலை - மஹதிவுல்வெவ தேசிய பாடசாலையில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் இன்று (04)  பெற்றுள்ளது.மஹதிவுல்வெவ தேசிய பாடசாலையில் பத்தாம் தரம் மற்றும் பதினோராம் தரம் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அதே பகுதியைச் சேர்ந்த மூவர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.ஆறாம் வகுப்பிற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு இன்று இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.இருந்த போதிலும் முதியன்சலாகே நிரஞ்லா ஜெயவீர என்ற பெண் தனது மகனை பதினோராம் தர மாணவர்கள் தாக்கியதாக மொரவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.இதே நேரம் தாக்கியதாக கூறப்படும் மாணவர்களும் தாக்குதலுக்குள்ளான மாணவரொருவரும் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement