நாட்டின் அபிவிருத்திக்காக ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைவரையும் அழைப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
இன்றையதினம் இடம்பெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் புத்தாண்டுக்கான விசேட அறிக்கையொன்றை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
நாடாளுமன்றக் குழுக்கள் இந்த வருடத்தில் அதிகபட்சமாக நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தேசிய பேரவையை செயல்படுத்த அனைவரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.