• May 20 2024

சுதந்திர நாள் நிகழ்வுக்கு வாருங்கள்- தமிழ் எம்.பி களுக்கு ரணில் அழைப்பு!

Sharmi / Feb 10th 2023, 10:53 am
image

Advertisement

யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ள  சுதந்திர நாள் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு  தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் தனது கொள்கை விளக்கவுரை முடிந்த பின்னர் இடம் பெற்ற தேநீர் விருந்துபசாரத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சாள்ஸ் நிர்மலநாதன், கோவிந்தன் கருணாகரன் ஆகியோருடன் கலந்துரையாடினார்.

இதன்போதுஇ யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சுதந்திரநாள் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அத்துடன் தனது யாழ்ப்பாணப் பயணத்தின்போது புத்திஜீவிகள் குழுவுடனும் சந்திப்பு நடத்தவுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

சுதந்திர நாள் நிகழ்வுக்கு வாருங்கள்- தமிழ் எம்.பி களுக்கு ரணில் அழைப்பு யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ள  சுதந்திர நாள் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு  தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் தனது கொள்கை விளக்கவுரை முடிந்த பின்னர் இடம் பெற்ற தேநீர் விருந்துபசாரத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சாள்ஸ் நிர்மலநாதன், கோவிந்தன் கருணாகரன் ஆகியோருடன் கலந்துரையாடினார். இதன்போதுஇ யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சுதந்திரநாள் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அத்துடன் தனது யாழ்ப்பாணப் பயணத்தின்போது புத்திஜீவிகள் குழுவுடனும் சந்திப்பு நடத்தவுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement