இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்புக்கு எதிராக 31 நாட்கள் உண்ணா விரதமிருந்து தாயக விடுதலைக்காக உயிர் நீத்த அன்னை பூபதியின் 35 வது நினைவேந்தல் நிகழ்வானது இன்று (19) மாலை 5.00 மணியளவில் நல்லூரடியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியடியில் இடம்பெற்றது.
ஈகச்சுடரானது மாவீரரொருவரின் தாயாரினால் ஏற்றப்பட்டதுடன் அன்னை பூபதியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன் அண்மையில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனுக்கும் ஈகச்சுடரேற்றப்பட்டு மலரஞ்சலிசெலுத்தப்பட்டது.
இவ் நினைவேந்தலில் பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் , யாழ் மாநகர முன்னாள் மேயர் மணிவண்ணன் , முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
யாழ்,நல்லூரடியில் அன்னை பூபதியின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் நினைவேந்தல் நிகழ்வு samugammedia இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்புக்கு எதிராக 31 நாட்கள் உண்ணா விரதமிருந்து தாயக விடுதலைக்காக உயிர் நீத்த அன்னை பூபதியின் 35 வது நினைவேந்தல் நிகழ்வானது இன்று (19) மாலை 5.00 மணியளவில் நல்லூரடியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியடியில் இடம்பெற்றது.ஈகச்சுடரானது மாவீரரொருவரின் தாயாரினால் ஏற்றப்பட்டதுடன் அன்னை பூபதியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன் அண்மையில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனுக்கும் ஈகச்சுடரேற்றப்பட்டு மலரஞ்சலிசெலுத்தப்பட்டது.இவ் நினைவேந்தலில் பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் , யாழ் மாநகர முன்னாள் மேயர் மணிவண்ணன் , முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.