இலங்கையில் தற்போது அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக அதிகளவான எரிபொருளை வாகனங்களில் நிரப்பவேண்டாம் என சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்ற செய்தியில் எந்த உண்மையும் இல்லை என சிலோன் இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்ற செய்தி தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக வாகன உரிமையாளர்களை அதிகபட்ச கொள்ளளவிற்கு எரிபொருள் தொட்டிகளை நிரப்ப வேண்டாம் என்றும் வெடிப்பு ஏற்படலாம் என்றும் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
எனவே இதனை தெளிவு படுத்தும் நோக்கில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அத்தகைய எச்சரிக்கையை வெளியிடவில்லை என்று சிலோன் இந்தியன் ஆயில் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது சமூக ஊடக தளங்களில் பரவும் ஒரு போலி செய்தி என்றும் சிலோன் இந்தியன் ஆயில் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எரிபொருட்களை நிரப்பவேண்டாம் - சமூக ஊடகங்களில் வெளியான செய்தி – உண்மையா. samugammedia இலங்கையில் தற்போது அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக அதிகளவான எரிபொருளை வாகனங்களில் நிரப்பவேண்டாம் என சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்ற செய்தியில் எந்த உண்மையும் இல்லை என சிலோன் இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்ற செய்தி தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக வாகன உரிமையாளர்களை அதிகபட்ச கொள்ளளவிற்கு எரிபொருள் தொட்டிகளை நிரப்ப வேண்டாம் என்றும் வெடிப்பு ஏற்படலாம் என்றும் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.எனவே இதனை தெளிவு படுத்தும் நோக்கில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அத்தகைய எச்சரிக்கையை வெளியிடவில்லை என்று சிலோன் இந்தியன் ஆயில் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.இது சமூக ஊடக தளங்களில் பரவும் ஒரு போலி செய்தி என்றும் சிலோன் இந்தியன் ஆயில் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.